×

சேடபட்டி-திருமங்கலம் மார்க்கத்தில் கதிரடிக்கும் களமானது சாலை போக்குவரத்துக்கு வாகன ஓட்டிகள் அவதி

பேரையூர், மார்ச் 7: சேடபட்டி-திருமங்கலம் சாலை கதிரடிக்கும் களமானதால் போக்குவரத்துக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சேடபட்டியில் இருந்து திருமங்கலம் செல்லும் சாலையில் குப்பல்நத்தம், பூசலப்புரம், சின்னுகாம்பட்டி, திரளி, ஆலம்பட்டி ஆகிய ஊர்கள் உள்ளன. இந்த மார்க்கத்தில் கனரகவாகனங்களான லாரி, வேன், கார் உள்ளிட்டவை சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த சாலையில் விவசாயிகள் அறுவடை செய்த துவரஞ்செடிகளை உலரப்போட்டு பயறுகளை பிரித்தெடுக்கின்றனர். இதனால், சாலை வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகின்றன. டூவீலர்களில் செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்களும் துவரம் செடிகள் சிக்கி குச்சிகள் கிழித்து கால்களில் ரத்தக் காயங்களை ஏற்படுத்துகிறது.

மேலும், இரவு நேரங்களில் இந்த துவரம் செடிகளால் டூவீலர்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலையின் விதிமுறைகளை பின்பற்றவும், விவசாயிகளுக்கு களம் அமைத்து கொடுத்து அறுவடை செய்ய வலியுறுத்த வேண்டும். சாலை முழுவதுமே துவரஞ்செடிகளை உலர வைப்பதால் சாலையே தெரியவில்லை என புகார் கூறுகின்றனர். எனவே, இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chedapatti-Thirumangalam road ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு