×

எல்லைப்பகுதியில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேச்சு

திருமங்கலம், மார்ச் 7: திருமங்கலத்தில் பாஜ சார்பில் முன்னாள் ராணுவவீரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ ஜெனரலும், தற்போதைய மத்திய இணை அமைச்சரு
மான வி.கே.சிங் பேசியதாவது: பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைப்பகுதியில் பணிபுரியும் ராணுவத்தினருக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் விவசாயிகளுக்கு சாதகமான பல்வேறு திட்டங்களை மோடி தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இதனை வாக்காளர்களிடம் எடுத்துசொல்லி வெற்றிக்கு பாடுபடவேண்டும்’ என்றார்.

Tags : Union Minister ,VK Singh ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...