நாமக்கல்: வயோதிகம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். பெர்மி(95), பெரியசாமி( 72) மற்றும் பரமேஸ்வரி(65) ஆகிய 3 பேரும் விஷம் குடித்தனர். நேற்று இரவு 3 பேரும் விஷம் அருந்திய நிலையில் தாய் பெர்மி மற்றும் மகள் பரமேஸ்வரி உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட முதியவர் பெரியசாமிக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
