×

நாகப்பட்டினம் அருகே கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டியபோது வெண்கல சிலைகள் கண்டெடுப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே நீலவடக்கு வீதியை சேர்ந்தவர் ராம்பிரசன்னாவுக்கு சொந்தமான இடம் நாகப்பட்டினம் புதிய கடற்கரை செல்லும் சாலையில் உள்ளது. இந்த இடத்தில் கட்டுமான பணிகளுக்காக நேற்று (9ம் தேதி) காலை பள்ளம் தோண்டியபோது 2 அடி உயத்தில் சிவன் பார்வதி சிலை மற்றும் சிறிய உருவத்தில் முருகர் ஒன்றாக ஒரே மேடையில் அமர்ந்த நிலையில் வெண்கல சிலை கிடைத்தது. மேலும் 2 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையின் பின்புற வளைவு வெங்கல சிலையும் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்வையிட்டனர். இதன் பின்னர் சிலைகளை நாகப்பட்டினம் ஆர்டிஓ சங்கரநாராயணனிடம் ஒப்படைத்தனர். ஆர்டிஓ நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இந்த சிலைகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : Nagapattinam Nagapattinam ,Ramprasanna ,Nilavadaku Road ,Nagapattinam ,Nagapattinam New Beach ,Sivan Parvati ,
× RELATED புதிய H1-B விசாக்களுக்கு டிரம்ப்...