சென்னை அடுத்த மாங்காட்டில் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாங்காடு ரகுநாதபுரம், சீனிவாசா நகர், சிக்ராயபுரம், இந்திரா நகர் ஜனனி நகரில் மின்வெட்டு ஏற்பட்டது. மின்வெட்டு குறித்து புகார் செய்தால் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
