திருவலம், மார்ச் 6: காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வரும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் பயிலும் கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்காக தகவல்களை துல்லியமாக பெறுவதற்காக ₹50 லட்சம் மதிப்பில் 50 கணினிகளுடன் மல்டிமீடியா லேப் அமைக்கப்பட்டது. இந்த மல்டிமீடியா லேப் திறப்பு நிகழ்ச்சி ேநற்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரைசெல்வி தலைமை தாங்கினார். இதில் சென்னை தனியார் கார் கம்பெனி இயக்குநர் ஸ்ரீகாந்த் மல்டிமீடியா லேப்பை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சென்னகிருஷ்ணன், மாதவன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் பல்கலைக்கழக பதிவாளர், தேர்வு கட்டுபாட்டு அலுவலர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.