×

திருவேங்கடத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

திருவேங்கடம்,மார்ச் 6:  திருவேங்கடத்தில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார். விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே இனாம்ரெட்டியபட்டி இந்திரா காலனி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகேசன்(49). எலக்ட்ரீசியனான இவர் திருவேங்கடம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா மகன் கனகராஜ் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று வீட்டில் மின் மோட்டார் பொருத்தும் பணியில் எலக்ட்ரீசியன் முருகேசன் ஈடுபட்டிருந்தார். அப்போது  எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முருகேசனின் மனைவி தாயம்மாள்(39) திருவேங்கடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்ஐ கமலாதேவி வழக்குப்பதிவு செய்து முருகேசனின் உடலை  கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது  குறித்து விசாரித்து வருகிறார். இறந்த முருகேசனுக்கு பொன்மணி(19) என்ற மகனும், சுதாலட்சுமி(17) என்ற மகளும் உள்ளனர்.

Tags : Thiruvananthapuram ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!