×

புளியங்குடி வீராசாமி செட்டியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு

புளியங்குடி,மார்ச் 6: புளியங்குடி எஸ்.வீராசாமி செட்டியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வளாக தேர்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. புளியங்குடியில் அமைந்துள்ள எஸ்.வீராசாமி செட்டியார் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்ட காலம் முதலே மூன்றாம் ஆண்டு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் நேர்முக தேர்வு மூலம் பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இக்கல்லூரியும், கோயம்புத்தூர் ஜே.எஸ். ஆட்டோ கேஸ்ட்பவுண்டரி லிமிடெட் நிறுவனமும் இணைந்து வளாக தேர்வை நடத்தியது. இதில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பினை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி சேர்மன் டாக்டர் எஸ்.வி முருகையா பாரட்டினார். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை ஜேஎஸ் ஆட்டோகேஸ்ட் பவுண்டரி லிமிடெட் மனித வளமேம்பாட்டு தலைவர் சுரேஷ் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அனிதா (பொறுப்பு) மற்றும் துறை தலைவர்கள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : Puliyangudi Veerasamy ,Chettiar Polytechnic College Campus Selection ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ