×

காளையார்கோவிலில் சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு

காளையார்கோவில், மார்ச் 6: மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காளையார்கோவிலில் இருந்து நடராஜபுரம் வரை சுமார் 8 கிலோ மீட்டர் சாலை செல்கிறது. இந்த சாலையைத்தான் மோர்க்குழி, அய்யனார்குளம், அரியநாச்சி குடியிருப்பு, பனங்குடி, நடராஜபுரம் பகுதி மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக போடப்பட்டது. அதன்பின் இதுநாள் வரை இச்சாலை பராமரிக்கப்படவில்லை. இதனால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மிகவும் சேதமடைந்த நிலையில்  உள்ளது.

மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். சாலை மிகவும் மோசமாக உள்ளதால் இந்த கிராமங்களுக்கு அவசர காலத்திற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் கூட வர மறுக்கின்றனர். இச்சாலையை சீரமைத்தால் காளையார்கோவில் பகுதி மக்கள் மிக அருகிலுள்ள பனங்குடி ரயில் நிலையத்திற்கு சென்று ரயில் சேவையை பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
மேலும் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் பல பகுதிகள் இதன்மூலம் குறுகிய தூரத்தில் இணைக்கப்படும். எனவே இந்த சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்த வேண்டியதிருக்கும் என இப்பகுதி மக்கள்  தெரிவித்துள்ளனர்.

Tags : Kaliningrad ,
× RELATED போக்குவரத்து நெருக்கடியை குறைக்க...