சென்னை: தமிழக சட்டப்பேரவை வரும் ஜூன் 18-ஆம் தேதி கூடும் என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்து உள்ளார். புதிய அரசின் முதல் சட்டபேரவை கூட்டம் ஆளுநர் அர்லேகர் உரையுடன் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்படும் என்றும் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், அதிமுக விவகாரம் தொடர்பாக இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
