×

நத்தத்தில் தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு

நத்தம், மார்ச் 6: நத்தத்தில் போலீசாருடன் இணைந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தினர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் தலைமை தாங்கி கொடி அணி வகுப்பு பேரணியை தொடங்கி வைத்தார். காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமார், நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, எஸ்ஐக்கள் சரவணன், பாண்டியன் முன்னிலை வகித்தனர். பஸ்நிலையத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பு பேரணி மீனாட்சிபுரம், அசோக்நகர், கடைவீதி, தர்பார் வழியாக மீண்டும் பஸ்நிலையம் வந்தது. இதில் மும்பையில் இருந்து வந்த 70 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : Nathdwara ,
× RELATED நத்தத்தில் 34 பேர் மனுதாக்கல்