×

வேலம்மாள் பள்ளி மாணவன் சாதனை

திருவள்ளூர், மார்ச் 6: நந்தம்பாக்கத்தில் உள்ள தெற்கு மண்டல விளையாட்டு உலகம் என்னும் அமைப்பின் சார்பில் முதல் மாநில அளவிலான குத்துச்சண்டை  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த மாநில அளவிலான போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 75 குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்றனர். இதில் முகப்பேர் வேலம்மாள் மையப்பள்ளியின் 8ம் வகுப்பு மாணவன் ஏ.அமர்ஷாலினும் கலந்துகொண்டார். இவர் 58 கிலோ இலகு எடை பிரிவில் தேசிய அளவிலான தகுதித் தேர்வு போட்டியில் இறுதிச்சுற்றில் தனது எதிராளியை வீழ்த்தி குத்துச்சண்டைக்கான தங்க பதக்கத்தை வென்றார்.

Tags :
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்...