×

அத்திவரதர் சயன நிலை குளத்தில் மத்திய நீர்வளத்துறையினர் ஆய்வு

காஞ்சிபுரம், மார்ச் 5: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்த சரஸ் திருக்குளத்தில் ஆதி அத்திவரதர் சயன நிலையில் நீருக்குள் வீற்றிருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த  2019 ஜூலை 1ம் தேதி முதல் 48 நாட்கள் நடந்தது. இதில் உலகமெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். ஆகஸ்ட் 18ம் தேதி வைபவம் முடிந்த பின் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த குளத்தில் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து, குளத்தின் தன்மையை பாதுகாக்க அசுத்தம் செய்யப்படாமல் இருக்க குளத்தில் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்த வழக்கில் 3 மாதங்களுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்து நீரின் தன்மையை அறிந்து மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையத்துக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுபடி மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் குழு, அத்திவரதர் வைத்திருக்கும் அனந்தசரஸ் குளத்தில் நீரின் தன்மையை ஆய்வு செய்தனர்.

Tags : Resources ,Attivarathar Sayan ,
× RELATED சட்டவிரோத குவாரி நடவடிக்கை தொடர்பான...