×

விழிப்புணர்வு பிரசாரத்தில் மக்களுக்கு வேண்டுகோள் வேதாரண்யம் பகுதி மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை

வேதாரண்யம், மார்ச் 5: வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. வேதாரண்யம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் டாக்டர்களின் பரிந்துரை கடிதத்துடன் நகராட்சி எல்லைக்குள் (10 கி.மீ) ரூ.1000 ,தாலுகா அளவில் ரூ.1800, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் உள்ள திருத்துறைப்பூண்டிக்கு ரூ.1800, திருவாரூருக்கு ரூ.3000, தஞ்சாவூருக்கு ரூ.3,600யை கட்டணமாக செலுத்தி பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுதவிர டாக்டர்களின் பரிந்துரையின் பெயரில் அவர்களது கடிதத்துடன் மேல்சிகிச்சைக்காக மற்ற ஊர்களுக்கு செல்ல கிலோமீட்டருக்கு 15 ரூபாய் வீதம் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆம்புலன்ஸை பயன்படுத்தும் அனைத்து இடங்களுக்கும் மருத்துவ உதவிக்கு செல்ல பயனாளிகள் டாக்டர்களின் பரிந்துரை சீட்டுடன் அவசியம் வரவேண்டும். ஆம்புலன்ஸ் சேவைக்காக அதன் டிரைவர் திராவிட மணியை 8438750452 என்ற எண்ணிலும், அலுவலக எண் 04369 - 250452 என்ற நம்பரிலும் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் உயிர்காக்கும் சேவையை பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்