×

பேராவூரணியில் தேர்தல் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி

பேராவூரணி, மார்ச் 5: பேராவூரணியில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். தாசில்தார் ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்.அறிவானந்தம் மேற்பார்வையில் செவிலியர் நித்யசீலா தடுப்பூசி செலுத்தினார். முகாமில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், தேர்தல் பணி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் 51 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், தலைமை எழுத்தர் அருள்மொழி, இளநிலை உதவியாளர் ராஜேந்திரன், துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், பாலசந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Peravurani ,
× RELATED பேராவூரணி அருகே 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு