அறந்தாங்கி, மார்ச் 5: அறந்தாங்கி அருகே மணல் கடத்தி சென்றதாக 3 வாகனங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். அறந்தாங்கி அடுத்த மொட்டையாண்டி மற்றும் சேவிக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தப்படுவதாக அறந்தாங்கி சப் கலெக்டர் ஆனந்த் மோகனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் சப் கலெக்டர் ஆனந்த்மோகன் ஆலோசனையின் பேரில் அறந்தாங்கி தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இல்லாமல் ஆற்று மணல் ஏற்றி வந்த 3 வாகனங்களை பறிமுதல் செய்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.