கொடைக்கானல் குறிஞ்சி நகரில் உள்ளது குறிஞ்சி மாரியம்மன் கோயில். இங்கு மாசி திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடந்தது. மார்ச் 1, 2ம் தேதிகளில் அம்மன் சப்பர பவனி நடந்தது. தொடர்ந்து சக்தி கரகம், மாவிளக்கு, விளக்கு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் டிப்போ பகுதியிலுள்ள காளியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தபடி கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்தல், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.