×

தேர்தல் விதிமீறல் 82 வழக்கு பதிவு

திண்டுக்கல், மார்ச் 5: திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் தாமாக முன்வந்து விளம்பர பேனர்களை அகற்றினர். ஆனால் ஒரு சில இடங்களில் விளம்பரங்கள் அகற்றப்படாமல் இருந்தது. இதுகுறித்து தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர் புகார்கள் வந்தன. அதன்பேரில் மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மகன் பலி: தந்தை படுகாயம்
ஒட்டன்சத்திரம் அருகே ஒண்டிவடநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (70). இவரது மகன் வடிவேல் (45). இருவரும் நேற்று காலை டூவீலரில் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர். செம்மடைப்பட்டி பஸ்ஸ்டாப் அருகே வந்தபோது நாகர்கோவிலில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் வடிவேல் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். படுகாயமடைந்த பழனிச்சாமி சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...