×

பேரூர் கிராமத்தில் வளர்ச்சி பணிகள் அதிகாரி ஆய்வு: 7 பேர் சிக்கினர்

முசிறி, மார்ச் 4: முசிறி அருகே பேரூர் கிராமத்தில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஊராட்சிகள் உதவி இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். முசிறி ஒன்றியத்தில் டெங்கு தடுப்பு பணிகள், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீட்டு குடிநீர் இணைப்பு மற்றும் வீடுகளில் உறிஞ்சி குழி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஊராட்சிகள் உதவி இயக்குனர் கங்காதாரணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒன்றிய ஆணையர்கள் மனோகரன், ராஜமோகன், ஊராட்சி தலைவர் சுகுணா, சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Perur ,
× RELATED ஜீயபுரம் அருகே பட்டாக்கத்தியை காட்டி மக்களை மிரட்டியவர் கைது