×

பாபநாசம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு பலி

பாபநாசம், மார்ச் 4: பாபநாசம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு பலியானார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த குமாரமங்கலத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மனோ (22). விவசாயி. இவர் பாபநாசம் ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிப்பட்டு உடல் சிதறி இறந்து கிடந்தார். தண்டவாளம் அருகில் அவர் வந்த பைக் நின்றது.  நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் இருப்புபாதை போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்த மனோ திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அதிமுக ஒன்றிய செயலாளர் சங்கரின் அண்ணன் மகன் ஆவார். இவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த ஒரு ரயிலில் அடிபட்டு இறந்துபோனதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : Papanasam ,
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...