×

பட்டுக்கோட்டையில் திமுக தகவல் தொழில் நுட்ப அணி கூட்டம்

பட்டுக்கோட்டை, மார்ச் 4: சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கு திமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தகவல் தொழில் நுட்ப அணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தஞ்சை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய, பேரூர் திமுக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் பட்டுக்கோட்டை பெரியதெருவில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர் வரவேற்றார்.

கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கற்பகமூர்த்தி, ஆரோக்கியஸ்வீட்டி, காளிதாஸ் மற்றும் மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய, பேரூர் திமுக ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக்குவதற்கு தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு முழுமையாக செயல்பட்டு வெற்றி பெறுவதற்கு பாடுபட வேண்டும். அறிவிக்கப்படும் வேட்பாளருக்கு தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்வது என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை ஒருங்கிணைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார்.

Tags : DMK ,Pattukottai ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி