×

ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா புதுகையில் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை

புதுக்கோட்டை, மார்ச் 4: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவையொட்டி வரும் 8ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்துக்க்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்திருப்பதாவது: புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த 8ம் தேதி நடக்கிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறையாகும். அதற்கு பதிலாக வரும் 27ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு வரும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாள் என்று அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை 1881ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல. இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பை கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும் அரசு பொதுத்தேர்வுகள் அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : RBI ,Tiruvapur Muthumariamman Temple Chariot Festival ,
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு