×

மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் பொன்னமராவதி அருகே முள்ளிப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 672 காளைகள் சீறிப்பாய்ந்தன

பொன்னமராவதி, மார்ச்.4: பொன்னமராவதி அருகே முள்ளிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 672காளைகள் பங்கேற்றன.16 மாடுபிடிவீரர்கள் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள முள்ளிப்பட்டியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. நேற்று 3ம் தேதி காலை காரையூர் கால்நடைமருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இலுப்பூர் ஆர்டிஓ தண்டபாணி உறுதிமொழி வாசிக்க மாடுபிடிவீரர்கள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் ஆர்டிஓ ஜல்லிக்கட்டை கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து 672காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

சீறிச்சென்ற காளைகளை 235வீரர்கள் விரட்டி பிடித்தனர். டிஎஸ்பி அருள்மொழிஅரசு தலைமையில் காரையூர் போலீசார் மற்றும் பொன்னமராவதி தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தாசில்தார் ஜெயபாரதி தலைமையில் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். காயமடைந்த 16மாடுபிடிவீரர்களுக்கு அரசு ஆரம்பசுகாதார நிலைய மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் இருவர் மேல்சிகிச்சைக்கு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Tags : District Election Officer ,Jallikattu ,Mullipatti ,Ponnamaravathi ,
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது