×

அழகாபுரியில் வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு முகாம்

ஆண்டிபட்டி, மார்ச் 4: ஆண்டிபட்டி அருகே ராஜதானி அழகாபுரியில் உசிலம்பட்டி பகுதி தனியார் வேளாண் கல்லூரி மாணவிகள் மிளகாய் செடி குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தினர். மிளகாய் செடியில் ஏற்படும் மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி மற்றும் இலைச்சுருட்டு நோய் குறித்த பயன்பாடுகளும், பாதிப்புகளையும் விவசாயிகளுக்கு எடுத்து கூறினர். மேலும் இலைச்சுருட்டு வைரஸ் நோயை பரப்பும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் காட்டப்பட்டது. இதில் மாணவிகள் கனிஅமுது, மெல்வின், சங்கீதா, புவனேஸ்வரி, ஆனந்தி, அனுபிரகாஷ் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : Agricultural Students Awareness Camp ,Alagapuri ,
× RELATED பெட்ரோல் குண்டு வீசி கள்ளக்காதலி படுகொலை: வாலிபர் கைது