×

சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெரியகுளம் சப்-டிவிஷனில் 100 துப்பாக்கிகள் ஒப்படைப்பு


பெரியகுளம், மார்ச் 4: சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று வரை பெரியகுளம் சப்-டிவிஷனனில் 100 லைசென்ஸ் துப்பாக்கிகள் போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பெரியகுளம் சப்-டிவிஷனில் தென்கரை, வடகரை, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. தென்கரை எல்கைக்கு உட்பட்ட அகமலை பகுதியிலிருந்தும், தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பகுதியான ஜி.தும்மலப்பட்டி வரை 40 கி.மீ தூரம் உள்ளது. லைசென்ஸ் பெற்று  துப்பாக்கி வைத்திருப்போர் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதனை சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது.

சட்டசபை தேர்தலை அமைதியான முறையில் நடத்த துப்பாக்கிகளை ஒப்படைப்பது முக்கியத்துவமாகும். பிப்.20ம் தேதி முதல் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதில் வடகரை போலீஸ் ஸ்டேஷனில் 19 துப்பாக்கிகளும், தென்கரை ஸ்டேஷனில் 60 , தேவதானப்பட்டியில் 14, ஜெயமங்கலத்தில் 7 என நேற்று வரை (மார்ச் 3) 100 துப்பாக்கிகள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டது. இதில் போடி சட்டசபை தொகுதி அகமலை ஊராட்சிக்குட்பட்ட பகுதி தென்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்கைக்குட்பட்டது. தென்கரையில் பெறப்பட்ட 60 துப்பாக்கிகளில் 20க்கும் அதிகமான துப்பாக்கிகள் அகமலை, கன்னக்கரை உட்பட 10 மலைக்கிராமப் பகுதிகளில் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Periyakulam ,
× RELATED மகாசிவராத்திரியை முன்னிட்டு...