தேவகோட்டை, மார்ச் 4: தேவகோட்டை கைலாசநாதபுரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கஸ்தூரி. 14 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். மகன், மகள் உள்ளனர். சங்கர் தனியார் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்க்கிறார். கணவன்,மனைவிக்குள் நீண்ட காலமாக அடிக்கடி சண்டை இருந்து வந்தது. ஒவ்வொரு முறையும் கோபித்து கொண்டு கஸ்லூரி தாய் வீட்டிற்கு செல்வார். பெற்றோர் சமாதானப்படுத்தி கணவனோடு சேர்த்து வைப்பார்கள்.