×

திருச்சி பொதுக்கூட்டம் தொடர்பாக திமுக செயல்வீரர்கள் கூட்டம்: 5ம் தேதி நடக்கிறது

மதுரை, மார்ச் 4: மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக மாவட்ட செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மதுரை மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7ம் தேதி திருச்சியில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது குறித்து மார்ச் 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் திருப்பாலை பெண்கள் கல்லூரி அருகே உள்ள குறிஞ்சி திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

எனவே இக்கூட்டத்தில் மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட கழக, பேரூர் கழக, செயலாளர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட திமுகவினர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Trichy ,
× RELATED திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்