×

நிலம் அபகரிக்க உடந்தை: தாசில்தார் உள்பட 10 பேர் மீது வழக்கு

மதுரை, மார்ச் 4: மதுரை அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்ததாக தாசில்தார், பதிவாளர் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம்(45). இவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில், ``இதே ஊரில் உள்ள எனக்கு சொந்தமான ஆறரை சென்ட் இடத்தை, இதே ஊரை சேர்ந்த சமயன் மகன்கள் சீனி, இளையசாமி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து, தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனர்.

இதற்கு இதே ஊரைச் சேர்ந்த முத்து, பாரதி, துர்கேஸ்வரன், சின்ன முனியப்பன் மற்றும் எழுமலை பதிவுத்துறை பதிவாளர் பழனிச்சாமி, கிளர்க் சின்ன முனியாண்டி வி.ஏ.ஓ. ரமணி மற்றும் பேரையூர் தாசில்தார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார், தாசில்தார், பதிவாளர் உள்பட 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேரையூர் பகுதியில் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tashildar ,
× RELATED சிதம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் டியூப் லைட் வெடித்து சிதறியது