ஒட்டன்சத்திரம், மார்ச் 4: ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலை ஜிஆர் பேட்டை பகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. இதனை எம்எல்ஏ அர.சக்கரபாணி துவங்கி வைத்தார். தொடர்ந்து எம்எல்ஏ லெக்கையன்கோட்டை ஊராட்சி, அரங்கநாதபுரம் பகுதியில் இருந்து முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
இதில் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, மாவட்ட அவை தலைவர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தங்கராஜ், தர்மராஜ், சுப்பிரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர் பாண்டியராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.