×

ஊர் சாலையை துண்டித்த ஓய்வு எஸ்ஐ வத்தலக்குண்டு அருகே மக்கள் புகார்

வத்தலக்குண்டு, மார்ச் 4: வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி மீனாங்கண்ணிபட்டியை சேர்ந்தவர் தர்மராஜ். ஓய்வுபெற்ற எஸ்ஐ. இவர் நேற்று ஊருக்கு செல்ல மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சாலையை தனது இடம் எனக்கூறி பொக்லைன் மூலம் தோண்டினார். இதனால் சாலை துண்டிக்கப்பட்டு ஊருக்கு செல்ல முடியாமல் போனது. இதனால் பாதிப்படைந்த மக்கள் விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகரிடம் முறையிட்டனர். தொடர்ந்து ஊர் மக்கள் வத்தலக்குண்டு யூனியன் அலுவலகம் சென்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முனியாண்டி, குணவதி மற்றும் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பவுலோசிடம் மனுக்கள் அளித்தனர். அதிகாரிகள், போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : SI Vattalakundu ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு