×

தமிழ்நாட்டில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு எங்கே..? எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு எங்கே..? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். பிரச்சாரத்தில் பேசிய வசனங்களை மீண்டும் நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் விஜய் கவனம் செலுத்த வேண்டும். கல்லாப்பெட்டி கூட்டணியை தக்க வைப்பதில் மட்டுமே முதலமைச்சர் விஜய் முழு கவனம் செலுத்துகிறார் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பான அவரது சமூக வலைதள பதிவில்;
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.

இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால்,

“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”

சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். என பதிவிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu ,Edappadi Palanisami ,Chennai ,Edapadi Palanisami ,general ,Vijay ,Kallappetti alliance ,chief minister ,
× RELATED ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா..?...