×

டூவீலர் மோதி விவசாயி பலி

பழநி, மார்ச் 3: பழநி அருகே தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்தவர் செல்லப்பகவுண்டர் (60). விவசாயி. இவர் சைக்கிளில் திண்டுக்கல் சாலையில் விருப்பாச்சி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டூவீலர் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் ஜிஹெச்சில் சேர்த்த பின் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...