×

திருச்சுழியில் அனைத்து கட்சி கூட்டம்

திருச்சுழி, மார்ச் 3:  திருச்சுழியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நலத்துறை அலுவலருமான கணேசன் தலைமையில் அனைத்து கட்சியினா் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் கட்சியினர் விளம்பர போர்டுகள் வைப்பது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது  உள்ளிட்டவற்றில் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றுவது தொடர்பாக கலந்து  ஆலோசிக்கப்பட்டது. மேலும் அமைதியாக தேர்தலை நடத்தி முடிப்பதற்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அனைத்து கட்சியினரிடம்  அறிவுறுத்தப்பட்டது. இதில் தேர்தல் உதவி அலுவலர் சிவக்குமார், டிஎஸ்பி ஜெயக்குமார் மற்றும் திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.

Tags : Tiruchirappalli ,
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....