கோவில்பட்டி, மார்ச் 3: கோவில்பட்டியில் எம்.கே. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளியில் உள்ள தியாகராஜ பாகவதர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கோவில்பட்டி விஸ்வகர்ம மகாஜன சங்க நிர்வாகிகள் மற்றும் கைவினைஞர் முன்னேற்ற கட்சியின் மாநில துணைச்செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் பொன்ராஜ், கருப்பசாமி, முருகன், முத்து, ரமேஷ், மனோகர், சமுத்திரம், இசக்கி, சுப்புராஜ், அழகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.