சென்னை: புதிதாக பதவியேற்ற தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக பதவியேற்க உள்ள 23 அமைச்சர்கள் பதவியேற்றனர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் பட்டியல்;
1. கே.ஏ.செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
2. ஸ்ரீநாத் – மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
3.எஸ்.கமலி – கால்நடைத்துறை
4. சி.விஜயலட்சுமி – பால்வளத்துறை
5. ஆர்.வி.ரஞ்சித்குமார் – வனத்துறை
6. வினோத் – வேளாண் மற்றும் உழவர் நலத்துறை
7. ராஜீவ் – சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
8. பி.ராஜ்குமார் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
9. வி.காந்திராஜ் – கூட்டுறவுத் துறை
10. பி.மதன் ராஜா – சிறு, குறு, நடுத்தர தொழில்துறை
11. கே.ஜெகதீஸ்வரி – சமூக நலத்துறை
12. எஸ்.ராஜேஷ்குமார் – சுற்றுலாத்துறை
13. எம்.விஜய் பாலாஜி – கைத்தறி, ஜவுளி மற்றும் கதர் துறை
14. டி.லோகேஷ் தமிழ்செல்வன் – வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை
15. ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்து துறை
16. ரமேஷ் – இந்து சமய அறநிலையத்துறை
17. பி.விஸ்வநாதன் – உயர் கல்வித்துறை
18. ஆர்.குமார் – செயற்கை நுண்ணறவு, தகவல் தொழில்நுட்பம்
19. கே.தென்னரசு – வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை
20. வி.சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
21. ஜெ.முகமது பர்வாஸ் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
22. டி.சரத்குமார் – மனிதவள மேலாண்மை துறை
23. என்.மரிய வில்சன் – நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை
24. கே.விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் கலால் துறை
தமிழ்நாடு அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. இந்த துறைகள் விசிக, ஐ.யூ.எம்.எல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
