×

பரமக்குடி அருகே களரி உற்சவ விழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

பரமக்குடி, மார்ச் 2:  பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் கருமலையான் கோவிலில் களரி உற்சவ விழாவினையொட்டி, மஞ்சள் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.  பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் கருமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி களரி உற்சவ விழா நடைபெறும். அதையொட்டி நேற்று கருமலையான் முனியப்பசாமி பாப்பாத்தி ஆகிய சுவாமிகள் கோயிலில் இருந்து புறப்பட்டு, கிராமம் முழுவதும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு மஞ்சள் பூசி அருள்வாக்கு கொடுத்தனர்.

முன்னதாக, கருமலையான் கோவிலில் கருங்குட்டி, செங்குட்டி, கரும்பு குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமானோர் நேர்த்திக்கடனாக பொங்கல் வைத்து கிடா வெட்டியும், கரும்பாலை தொட்டிகள் எடுத்தும் சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். சுவாமிகள் வீதி உலா வந்த போது பெண்கள் மஞ்சள் பூசும் நிழ்வுகள் நடைபெற்றது.

மேலும், சாமிக்கு மஞ்சள் தண்ணீர் கரைத்து ஊற்றியும், தேங்காய் உடைத்தும் சுவாமியை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன், அரியனேந்தல் கிராம தலைவர் ராமு, செயலாளர் சௌந்தரபாண்டியன், பொருளாளர் சிவகுமார், நிர்வாகிகள் கருணாகரன், கலைபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உள்பட கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Kalari festival ,Paramakudi ,
× RELATED கடலாடி அருகே களரி திருவிழாவில்...