×

நீடாமங்கலம்- மன்னார்குடி அகல ரயில் பாதை மின்மய பணி நிறைவு

நீடாமங்கலம் மார்ச்2: நீடாமங்கலம் -மன்னார்குடி அகல ரயில்பாதையில் மின் மயமாக்கும் பணி நிறைவடைந்துள்ளது. நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி வரையிலான 13 கிலோமீட்டர் தூர அகல ரயில்பாதையில் மின்மயமாக்கல் பணி 15 கோடி ரூபாய் செலவில் நிறைவடைந்துள்ளது.இந்த மின்மயமாக்கல் பணி நிறைவடைந்ததையொட்டி வரும் 4ம்தேதி பெங்களூரிலிருந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து மன்னார்குடி வரை ஆய்வு மேற்கொள்கிறார். என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்குப்பின் மன்னார்குடியிலிருந்து நீடாமங்கலம் வழியாக சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில்,மன்னார்குடியிலிருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில்,மன்னார்குடியிலிருந்து திருப்பதி செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்கள் மின்சாரம் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

Tags : Needamangalam ,Mannargudi ,
× RELATED நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில்...