×

திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் தொடர்பான அனுமதி ஆன்லைனில் பதிவு செய்து பெறலாம்

திருவாரூர், மார்ச் 2: திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் தொடர்பாக அனுமதியை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆன்லைன் மூலமாக பெற்று கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று கூறியதாவது, திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி மற்றும் நன்னிலம் ஆகிய 4 எம்எல்ஏ தொகுதிகள் இருந்து வருகின்றன. இதில் திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக திருவாரூர் ஆர்டிஓ பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண் 9445000464, இதேபோல் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் கண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண் 9445000295, மன்னார்குடி தொகுதிக்கு மன்னார்குடி ஆர்டிஓ அழகர்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைப்பேசி எண் 9445000463 மற்றும் நன்னிலம் தொகுதிக்கு கலால் உதவி ஆணையர் பானுகோபன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைப்பேசி எண் 9443486537. எனவே சம்பந்தப்பட்ட தொகுதியில் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட அனுமதிகளுக்கு மேற்கண்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு அரசியல் கட்சியினர் கேட்டு கொள்ளப்படுவதுடன் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம் என அவர் அதில் தெரிவித்தார்.

Tags : Thiruvarur district ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...