×

பெரம்பலூர் கலெக்டர் வேண்டுகோள் பெரம்பலூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


பெரம்பலூர்,மார்ச் 2: பெரம்பலூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா கை.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி செல்லம்மாள் (55). இதில் கணேசன் 4 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். செல்லம்மாள் தற்போ து தனது 2வது மகன் வேல்முருகனுடன் வசித்து வருகிறார். செல்லம்மாள் நேற்று கை.களத்தூரிலிருந்து பசும்பலூர் செல்லும் சாலையில் தனது வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் செல்லம்மாள் அருகே வந்தவுடன், அவர் எதிர்பாராத நிலையில் கழுத்தில் இருந்த 6பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதனால் பதறிப்போன செல்லம்மாள் சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். அவரது சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்து செயினை பறித்து சென்ற திருடர்களை பைக்குகளில் விரட்டினர். இருந்தும் நகையை பறித்து சென்ற திருடர்கள் பெரிய வடகரை, பெரியம்மாபாளையம், கள்ளப்பட்டி வழியாக மின்னல் வேகத்தில் சென்று தப்பியுள்ளனர். இது குறித்து செல்லம்மாள், கை.களத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் நடந்து சென் ற பெண்ணிடம் செயினை பறித்துக் கொண்டு கொள் ளையர் தப்பியோடிய சம்ப வம் அப்பகுதியில் பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது. இ தேபோல் கடந்த ஒரு மாதத் துக்கு முன்பு இதே ஊரில் அதிகாலை வாசல் கூட்டிக் கொண்டிருந்த பெண்ணி ன் தாலிச் செயினை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பியோடியது குறிப்பிடத்தக்கது.

Tags : Perambalur Collector ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...