×

காரைக்காலில்

காரைக்கால், மார்ச் 2: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் காரைக்காலில் தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. காரைக்கால் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அர்ஜுன் சர்மா தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தேர்தல் நன்னடத்தை, வேட்பாளர்கள் தேர்தலில் எவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும், மேடை அமைத்தல், கட்சி கொடி கட்டுதல், வாகன செலவுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அர்ஜுன் சர்மா விளக்கினார். கூட்டத்தில் துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஷ், துணை மாவட்ட ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Tags : Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...