×

வடமாநில வாலிபர் மர்மச்சாவு

ஈரோடு, மார்ச் 2:  ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காந்திலாய் மகன் நவ்ரங் (23). இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு கருங்கல்பாளையம் ஓட்டுக்கார சின்னையா வீதியில் வசிக்கும் அவரது அக்கா தீபிகா (30), வீட்டில் தங்கி பாலீதின் தொழிலை கற்று வந்தார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி இரவு வேலை முடிந்து, நவ்ரங் மேல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்க சென்றார். மறுநாள் (நேற்று முன்தினம்) காலை நவ்ரங்கை சாப்பிட அழைக்க தீபிகா சென்ற போது, நவ்ரங் எவ்வித உடல் அசைவும் இல்லாமல் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு நவ்ரங் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, நவ்ரங் இறப்பு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Northern Valley Marmachavu ,
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது