×

குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து திருவாரூரில் தர்ணா போராட்டம்

திருவாரூர், மார்ச் 1: மத்திய அரசின் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் நேற்று தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் 15 இடங்களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று ரயில் நிலையம் முன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளைத் தலைவர் இக்பால் தலைமையில் மாநில செயலாளர் தாவூத், மாவட்ட தலைவர் முகம்மது பாசித், மாவட்ட செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் சலீம் மற்றும் பொறுப்பாளர்கள் அனஸ்நபில், மாலிக் ,பகுருதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கொடிக்கால்பாளையத்தில் கிளை தலைவர் இலியாஸ் தலைமையிலும், புலிவலத்தில் கிளை தலைவர் பஷீர் தலைமையிலும், மேல ஒதியத்தூரில் கிளை தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையிலும், அடியக்கமங்கலத்தில் கிளை தலைவர் முகமது ஹக் தலைமையிலும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மேலும் கூத்தாநல்லூர், தண்ணீர் குன்னம், பூதமங்கலம், பொதக்குடி, குடவாசல், நன்னிலம், கொல்லாபுரம், அடவங்குடி உட்பட 15 இடங்களில் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை எதிர்ப்பு காத்திருப்பபு தர்ணா போராட்டம் திருத்துறைப்பூண்டி: திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருத்துறைப்பூண்டி நகர கிளை சார்பாக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காத்திருப்பு தர்ணா போராட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

நேற்று காலை துவங்கி மதியம் வரை நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஹம்மது மிஸ்கீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் யாசர் அரபாத், மாவட்ட வர்த்தகரணி ஜமால் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் தாஹா, மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் பேசினர். குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கிளை தலைவர் அன்வர்தீன், கிளை செயலாளர் பாரூக், பொருளாளர் ஹாஜா மைதீன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளாக ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கட்டிமேடு மெயின் ரோட்டில் மாவட்ட துனைச்செயலாளர் ஹாஜா மைதீன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

வலங்கைமான்: இதேபோல் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தவ்ஹித் ஜமாத் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சிக்கந்தஅலி தலைமையில்ஆவூர்,கோவிந்தகுடி மற்றும் வலங்கைமாள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கிளை நிர்வாகிகள் மற்றும் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் உட்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். இதில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனபேசினர்.

மன்னார்குடி
திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மன்னை கிளையின் சார்பில் மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் நேற்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Dharna ,Thiruvarur ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...