×

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 3ம்தேதி முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்

தஞ்சை, மார்ச்1: தஞ்சை மாநகராட்சியில் வரும் 3ம் தேதி முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. தஞ்சை மாநகராட்சிக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருவையாறு - கண்டியூர் பேருந்து நிறுத்தத்தில் 2 இடம், கண்டியூர் அரசுப் பள்ளி எதிர்புறம் ஒரு இடம், கண்டியூர் பெருமாள் கோயில் சந்தில் 2 இடம், நடுக்கடையில் 1 இடம மற்றும் பழைய திருவையாறு ரோட்டில் 4 இடங்களில் உள்ள பிரதான குழாயில் பழுதுகள் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனால் வார்டு 1 முதல் 51 வரையிலான அனைத்து பகுதிகளிலும் வரும் 3,4,5ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட 3 நாட்களும் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Tanjore Corporation ,
× RELATED தஞ்சை மாநகராட்சி இடத்தில்...