கும்பகோணம்,மார்ச் 1: கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் தென்இந்தியா அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் கும்பகோணத்தை அடுத்த முத்துபிள்ளைமண்டபம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர். 6 ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சீத்தாலட்சுமி, சுப, மாணவர் கவியரசன் ஆகிய 3பேரும் இரண்டாமிடமும், 8 ம் வகுப்பு படிக்கும் மாணவி தோனிகா மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படித்த மாணவர்களையும், கராத்தே பயிற்சியாளர் பஷீர் ஆகியோரை, கும்பகோணம் வட்டார கல்வி அலுவலர் பேபி, தலைமையாசிரியர் சாந்தி, வட்டார வள மேற்பார்வையாளர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர் அந்தோனிதாஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.