×

தமிழ் ஆட்சிமொழி வார விழிப்புணர்வு பேரணி

கரூர், மார்ச் 1: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் ஆட்சிமொழி வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது. தாந்தோணிமலை கோயில் வளைவு அருகே இருந்து புறப்பட்டது. அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். மேலைபழனியப்பன், எழில்வாணன், தென்னிலை கோவிந்தன், திருமூர்த்தி, நாகேந்திரகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் வாழ்க தமிழில் எழுதுவோம், தமிழில் கையெழுத்திடுவோம் என முழக்கமிட்டனர். பேராசிரியர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தமிழ்வளர்ச்சித்துறை அலுவலர் சுஜாதா நன்றி கூறினார்.

Tags : Tamil Rule Language Week Awareness Rally ,
× RELATED தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்