×

20 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

சாயல்குடி, மார்ச் 1: சட்டமன்ற தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 தாசில்தார்களை பணியிடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.பிப். 26 ந்தேதி மாலையில் 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது பரமக்குடி தாசில்தார் செந்தில்வேல்முருகன் திருவாடானைக்கும், முதுகுளத்தூர் தாசில்தார் முருகேசன் கீழக்கரைக்கும், முதுகுளத்தூர் தனி தாசில்தார் தமீம்ராஜா பரமக்குடிக்கும், அரசு கேபிள் டிவி தனி தாசில்தார் செந்தில்குமார் முதுகுளத்தருக்கும், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மார்டின்ராஜன் ராமேஸ்வரத்திற்கும், ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் ரவிச்சந்திரன் ராமநாதபுரத்திற்கும், ராமநாதபுரம் தாசில்தார் முருகவேலு ஆர்.எஸ்.மங்கலத்திற்கும், திருவாடானை தனி தாசில்தார் கார்த்திகேயன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவிற்கும், கீழக்கரை தாசில்தார் வீரராஜா ராமநாதபுரம் சப் கலெக்டர் நேர்முக உதவியாளராகவும், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் சரவணன் ராமநாதபுரம் நில எடுப்பு தாசில்தாராகவும், குற்றவியல் அலுவலக மேலாளர் கோபால் பரமக்குடி தனி தாசில்தாராகவும், ஆய மேற்பார்வை அலுவலர் சுரேஷ்குமார் குற்றவியல் அலுவலக மேலாளராகவும், ராமநாதபுரம் சப்கலெக்டர் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வி பேரிடர் மேலாண்மை தாசில்தாராகவும், பரமக்குடி தனிதாசில்தார் அமலோற்பவ ஜெயராணி அரசு கேபிள் டிவிக்கும், ராமேஸ்வரம் தாசில்தார் தியாகராஜன் முதுகுளத்தூர் தனிதாசில்தாராகவும், கமுதி தாசில்தார் செண்பகலதா ராமநாதபுரம் தனி தாசில்தாராகவும், திருவாடானை தாசில்தார் மாதவன் கமுதி தாசில்தாராகவும் பரமக்குடி ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் சிரோன்மணி ஆய மேற்பார்வை அலுவலராகவும், ராமநாதபுரம் நில எடுப்பு பிரிவு தனி தாசில்தார் ஜெயக்குமார் திருவாடானை தனி தாசில்தாராகவும், ராமநாதபுரம் தனிதாசில்தார்(சமூக பாதுகாப்பு திட்டம்) சபீதாள்பேகம் பரமக்குடி நில எடுப்பு பிரிவு தனிதாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED அரசின் வேளாண் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்