×

திருப்பாலை பகுதியில் 2 வீடுகளில் கொள்ளை

மதுரை, மார்ச் 1: மதுரை திருப்பாலை, சேசு சர்ச் பின்புறம் வசித்து வருபவர் சக்திவேலன்(25). நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த தங்கச்சங்கிலி, மோதிரம், தோடு, டைமண்ட் டாலர் என பத்தேகால் பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.10 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. திருப்பாலை போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர்.

இந்த கொள்ளை நடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன் கண்ணனேந்தல் மெயி ன்ேராடு, ேகாகுல் நகர் 2வது தெருவில் வசித்து வரும், பழனிவேலு வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.   திருப்பாலை போலீசார், கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இங்கு கொள்ளையடித்த கும்பல்தான், சக்திவேலன் வீட்டிலும் கொள்ளையடித்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக திருப்பாலை போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பாலை காவல்நிலையம் கடந்த 13ம் தேதிதான் துவக்கப்பட்டது. இந்த இரு கொள்ளை வழக்குகள்தான், இக்காவல் நிலையத்தில் பதிவான முதல் வழக்காகும்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...