×

6 தாசில்தார்கள் இடமாற்றம்

மதுரை, மார்ச் 1: சட்டமன்றத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் 6 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டார். உசிலம்பட்டி கோட்ட கலால் அலுவலர் உதயசங்கர், மதுரை மேற்கு தாலுகா தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சரவணன் உசிலம்பட்டி கோட்ட கலால் அலுவலராகவும், தாசில்தார் சூரியகுமாரி வாடிப்பட்டி தாலுகா தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தாசில்தாராகவும், தாசில்தார் தமிழ்செல்வி ஆதிதிராவிடர் நிலம் எடுப்பு அலகு-2 தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர். திருப்பரங்குன்றம் தாலுகா சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் நாகராஜன் மதுரை கிழக்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட அலுவலராகவும், தாசில்தார் பிரபாகரன் கூடுதல் வரவேற்பு தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர். வருவாய்த்துறையினர் போராட்டம் காரணமாக கடந்த வாரம் வரை பொறுப்பு ஏற்காமல் இருந்தனர். தேர்தல் பிரிவில் பணியாற்றும் தாசில்தார்கள் அனைவரும் உடனடியாக பொறுப்பு ஏற்றனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...