×

ஊத்தங்கரையில் 2 இளம்பெண்கள் மாயம்

ஊத்தங்கரை, மார்ச் 1: ஊத்தங்கரை சத்யா நகரை சேர்ந்தவர் மாதவன் மகள் நந்தினி (19). இவர் அடிக்கடி செல்போனில் நண்பர்களுடன் பேசி வந்துள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்ததால், நந்தினி கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் மகள் நவமியா(19). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் தனது தாய் ஜீவராணியுடன் ஊத்தங்கரைக்கு வந்துள்ளார். அப்போது அவர் திடீரென மாயமானார். இதுகுறித்து ஜீவராணி ஊத்தங்கரை போலீசில் புகாரளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Uttaranchal ,
× RELATED சிவராத்திரி தரிசன தலங்கள்