×

கறம்பக்குடி வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

கறம்பக்குடி, பிப். 26: கறம்பக்குடி வேளாண் வட்டார விவசாய பகுதியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிவகுமார் ஆய்வு செய்தார். அதன்படி கறம்பக்குடி வடத்தெரு கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு குழுமம் (எண்ணெய்வித்து) திட்டத்தின்கீழ் நிலக்கடலை பயிர்களை பார்வையிட்டு செயல்விளக்க திட்ட ஆய்வு செய்தார். மேலும் கோட்டைக்காட்டில் கஜா புயல் காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறு சீரமைய்ப்பு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகளின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் முல்லங்குறிச்சி வடக்கு கிராமத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் நிலக்கடலை பயிருக்கு தெளிப்புநீர் பாசனம் அளிக்கப்பட்ட திடலை ஆய்வு செய்தார். கறம்பக்குடி வேளாண் உதவி இயக்குனர் லூர்து ராயப்பன், வேளாண் அலுவலர் சந்தனம், வேளாண் துணை அலுவலர் மஹாலிங்கம், உதவி விதை அலுவலர் நாடிமுத்து மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : Karambakudy ,
× RELATED புதுக்கோட்டையில் 27வது நாளாக தொடரும் போராட்டம்